News November 23, 2024

ராணிப்பேட்டை அருகே 3 கடைகளுக்கு அபராதம் 

image

சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவிபாலா தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Similar News

News December 21, 2025

ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

ராணிப்பேட்டை: வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது!

image

அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியில் தாலுகா போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மது விற்ற செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 95 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

ராணிப்பேட்டை: கிணற்றில் தவறி விழுந்த மாணவி பலி

image

வாலாஜாபேட்டை அடுத்த ஏடாகுப்பம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சவிதா. நேற்று (டிச.20) சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது தாயுடன் அருகில் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். மகள் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் சவிதாவின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!