News November 23, 2024

ராணிப்பேட்டை அருகே 3 கடைகளுக்கு அபராதம் 

image

சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவிபாலா தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Similar News

News October 28, 2025

ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

image

ராணிப்பேட்டை மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.

News October 28, 2025

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்.30ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

ராணிப்பேட்டை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

image

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!