News April 14, 2024
ராணிப்பேட்டை அருகே பூட்டை உடைத்து திருட்டு

கலவை தாலுகா குண்டலேரி கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் ஒரு தங்க திருமாங்கல்யம் மற்றும் ஒரு கவரிங் திருமாங்கல்யம் ஒரு வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி திமிரி காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
Similar News
News July 7, 2025
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையிடம் இருந்து அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.
News July 6, 2025
மேல்விஷாரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகளை வேலூர் அல்லது வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இவ்வாறு மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததை கண்டித்து ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
News July 6, 2025
குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.