News April 14, 2024

ராணிப்பேட்டை அருகே பூட்டை உடைத்து திருட்டு

image

கலவை தாலுகா குண்டலேரி கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் ஒரு தங்க திருமாங்கல்யம் மற்றும் ஒரு கவரிங் திருமாங்கல்யம் ஒரு வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி திமிரி காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

Similar News

News November 16, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 15, 2025

காவல் நிலையத்தில் திடீர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

இன்று (நவ.15) அரக்கோணம் உட்கோட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

News November 15, 2025

ராணிபேட்டை:ரயில்வேயில் 3058 காலிபணியிடங்கள் அறிவிப்பு!

image

ராணிபேட்டை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

error: Content is protected !!