News August 25, 2024
ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
ராணிப்பேட்டை: தொடப்பள்ளியில் 2 சிலிண்டர் திருட்டு!

அகவலத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சமையலறையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து இரண்டு சிலிண்டர்களை திருடி சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நேற்று நவம்பர் 30ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர் .சிலிண்டர் திருட்டு குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 30, 2025
ராணிப்பேட்டை: திருமணமான சில நிமிடத்தில் சடலமாக மீட்பு

அரும்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா. இவர்களுக்கு இன்று (நவ.30)ஆம் தேதி அரும்பாக்கத் ரேணுகாம்பாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நிமிடங்களில் அஜித் குமார் கோயில் அருகே உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கலவை போலீசார் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 30, 2025
SIR: ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (30.11.2025) நடைபெற்று வரும் SIR முகாமில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவத் தகவலை உடனடியாக பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட BLO விடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பங்கள் திருமப ஒப்படைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.


