News August 6, 2024
ராணிப்பேட்டை:வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை?

சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்ற கோணத்தில் சோளிங்கர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டையில் நாய் கடித்து பலி!

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (டிச.04) கலைச்செல்விக்கு சொந்தமான ஒரு பெரிய ஆடு, 6 சிறிய ஆட்டுக்குட்டிகள் என 7 ஆடுகளை நாய் கடித்து இறந்தது தெரிய வந்தது. பின், நெமிலி வட்டாட்சியர் மற்றும் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


