News August 7, 2024
ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அரக்கோணம் , ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ராணிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று (டிச.5) ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை மற்றும் ரெயின்கோட் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: கிணற்றில் வழுக்கி விழுந்து முதியவர் பலி!

ராணிப்பேட்டை: திமிரி பேரூராட்சி அபிராமி நகரில் உள்ள கிணற்றில், முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று (டிச.4) தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (60) இயற்கை உபாதைக்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.


