News August 3, 2024
ராணிப்பேட்டையில் புதிய திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த லோகநாயகி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராணிப்பேட்டையில் புதிய ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக ஜெயசுதா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
Similar News
News November 16, 2025
ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 16, 2025
ராணிப்பேட்டை: 2வது திருமணம் செய்தவருக்கு சிறை!

ராணிப்பேட்டை: கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பார்த்தீபன் (48), முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையறிந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று ஆற்காடு நீதிமன்றம் பார்த்தீபனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டணையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்கவும் உத்தரவிட்டது.
News November 16, 2025
ராணிப்பேட்டையில் 172 பேர் ஆப்சென்ட்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 1,945 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 1,773 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 172 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


