News April 10, 2025

ராணிப்பேட்டையில் பயிற்றுநர் வேலை 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. பயிற்றுநர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் dsorpt@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 22, 2026

ராணிப்பேட்டை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <>TamilNilam Geo-Info<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க!

News February 22, 2026

ராணிப்பேட்டை: 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 3பேர் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை தனியார் கிடங்கில், ஆந்திராவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த கோவிந்த் குமார், புத்தன் ஷாப் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

News February 22, 2026

ராணிப்பேட்டை அருகே தீப்பிடித்து எரிந்த கூரை வீடு!

image

இச்சிப்புத்தூரை சேர்ந்தவர் ஆதி கேசவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று (பிப்ரவரி.21) தீப்பிடித்து எரிந்தது. அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து கேஸ் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!