News April 23, 2025

ராணிப்பேட்டையில் சம்பவ இடத்தில் பலியான போலீஸ்

image

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி நிகழ்ந்த விபத்தில் காவலர் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப், ஆவடியில் பட்டாலியன் போலீஸாக பணியாற்றி வந்தார். உயிரிழந்த அவர் சோளிங்கரை அடுத்த கீழாண்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 19, 2025

JUST IN: ராணிப்பேட்டையில் 1,45,157 பேர் நீக்கம்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 5,06,522-ல் இருந்து 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.

News December 19, 2025

ராணிப்பேட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News December 19, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!