News August 4, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.

Similar News

News December 1, 2025

ராணிப்பேட்டை: கார், லாரி நேருக்கு நேர் மோதல்.. விபத்து!

image

சோளிங்கரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் பாராஞ்சியில் நேற்று நவ.30ஆம் தேதி காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் காயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த ஒரு வீடு மற்றும் மின் கம்பம் முறிந்து விழுந்தது. விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

ராணிப்பேட்டை: தொடப்பள்ளியில் 2 சிலிண்டர் திருட்டு!

image

அகவலத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சமையலறையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து இரண்டு சிலிண்டர்களை திருடி சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நேற்று நவம்பர் 30ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர் .சிலிண்டர் திருட்டு குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 30, 2025

ராணிப்பேட்டை: திருமணமான சில நிமிடத்தில் சடலமாக மீட்பு

image

அரும்பாக்கத்தை சேர்ந்த அஜித் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா. இவர்களுக்கு இன்று (நவ.30)ஆம் தேதி அரும்பாக்கத் ரேணுகாம்பாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நிமிடங்களில் அஜித் குமார் கோயில் அருகே உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கலவை போலீசார் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!