News August 2, 2024

ராணிப்பேட்டையில் ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறைசார் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News July 7, 2025

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையிடம் இருந்து அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.

News July 6, 2025

மேல்விஷாரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகளை வேலூர் அல்லது வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இவ்வாறு மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததை கண்டித்து ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News July 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

image

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!