News April 29, 2025

ராணிப்பேட்டையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து நாளை(ஏப்.30) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ராணிப்பேட்டையில் மட்டும் 31 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

ராணிப்பேட்டை நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நேற்று (நவ.03) நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின் அமைச்சர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன், ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் உடன் பங்கேற்றனர்.

News November 4, 2025

ராணிப்பேட்டை: குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டம் நேற்று (நவ.03) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை, நில எடுப்பு) கௌசல்யா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கேட்டறிந்தார். பின் மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!