News April 16, 2025
ராஜேந்திரபாலாஜி மீது ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல்ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
Similar News
News September 14, 2025
ஸ்ரீவி ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆவணி மாத 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னாருக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News September 13, 2025
சிவகாசி: ஆன்லைன் பட்டாசு விற்பவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைன், இணையதளம் மூலமாக பட்டாசு ஆர்டர் பெறுவது, விற்பனை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கிரிமினல் வழக்கு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் ஆய்வு தீவிரம்..!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.