News March 25, 2025

ராஜினாமா கடிதம் அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

காஞ்சிபுரம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனுர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த தமிழமுதன் பதவி வகித்து வந்தார். ஆதனூர் ஊராட்சியில் கொருக்கந்தாங்கள், பள்ளஞ்சேரி, டி.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் நெருக்கடி கொடுப்பதாக கூறி தமிழ் அமுதன் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

காஞ்சி: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

image

காஞ்சிபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

ஸ்ரீபெரும்புதூர்: ஓடும் பேருந்தில் துணிகரம்!

image

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் நர்மதா (31). இடியாப்ப வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது கணவருடன் சொந்த ஊரான சிவகங்கை சென்று விட்டு நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் கோயம்பேடு வந்தபோது, கையில் வைத்திருந்த பையில், ரூ.14,000 & வெள்ளியிலான கைசங்கிலி திருடுபோய் இருப்பது தெரிந்தது. போலீசார் விசாரித்ததில், முன் இருக்கையில் இருந்த சிங்காரம் (60) திருடியது தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

காஞ்சி: நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிய மாணவர்கள்!

image

காஞ்சி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூசாமி MTC நடத்துநர். இவர், அகரம் -தாம்பரம் பேருந்தில், நடத்துநராக உள்ளார். ஆதிநகர் அருகே வந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர், பேருந்து படிக்கட்டு & ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், பூசாமி மாணவர்களிடம் பேச, அவர்கள் இவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!