News April 6, 2025
ராஜஸ்தான் அணி அபார வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News November 24, 2025
தென்காசி விபத்து.. விஜய் வேதனை

தென்காசி <<18374035>>பஸ் விபத்தில் <<>>உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பஸ் விபத்தில் உயிர்கள் பறிபோன செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரண குணமடையும் வகையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜய் வலியுறுத்தியுள்ளார்.
News November 24, 2025
நடிகர் ரஜினி கண்ணீர் அஞ்சலி

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘பிரியாவிடை நண்பரே, உங்களின் பொன்னான மனதையும் நாம் பகிர்ந்த தருணங்களையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘RIP தரம் ஜி’ என உருக்கமாக பதிவிட்ட அவர், தர்மேந்திராவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிம்ரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தர்மேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 24, 2025
சிறுவர்கள் SM பயன்படுத்த தடை: மலேசியா முடிவு

<<18255562>>ஆஸி.,யில்<<>> 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டிச.10 முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதேபோன்ற தடையை 2026 முதல் கொண்டுவர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற தடையை இந்தியாவில் கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து?


