News April 6, 2025

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News October 15, 2025

சங்கிலியை இழுத்தால் Train நிற்பது எப்படி?

image

ரயிலுக்கு அடியில் மிக நீளமான பைப் ஒன்று செல்கிறது. இந்த பைப்பில் காற்று நிறைந்திருப்பதால் அதன் அழுத்தத்தில் ரயில் நகர்கிறது. ஆனால் இந்த சங்கிலியை இழுக்கும்போது, ஒரு சிறிய துளை உருவாகி அந்த பைப்களில் உள்ள காற்று வெளியாகிறது. இதனால், ஏதோவொரு கோளாறு ஏற்பட்டிருப்பதை புரிந்துகொள்ளும் மெஷின் ஆட்டோமேட்டிக்காக அனைத்து பிரேக்களையும் அழுத்தி ரயிலை நிறுத்துகிறது. 99% பேருக்கு தெரியாத தகவலை SHARE பண்ணுங்க.

News October 15, 2025

கரூர் துயரத்திலும் திமுக அரசியல் செய்கிறது: EPS

image

கரூர் துயரத்தையொட்டி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதனை பார்த்த சபாநாயகர் என்ன ரத்த கொதிப்பா என கேட்டதற்கு, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம் என பதிலடியும் கொடுத்துள்ளார். துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News October 15, 2025

13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

TN-ல் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். தற்போது, தேனி, புதுக்கோட்டை, நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!