News April 6, 2025

ராஜஸ்தான் அணி அபார வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News December 7, 2025

வயசானாலும் Performance-ல் குறைவைக்காத Ro-Ko!

image

2027 WC தொடரின் போது, Ro-Ko இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், SA-வுக்கு எதிரான ODI தொடரில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், தொடர் நாயகன் விருதை வென்றது கோலி. முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் இவை அனைத்தும் ரோஹித் வசம் இருந்தது. பெர்பார்மென்ஸில் குறைவைக்காத அவர்களின் கனவுக்கு வழிவிடலாம் அல்லவா?

News December 7, 2025

BREAKING: விலை தடாலடியாக மாறியது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹2 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலையில் மாற்றமின்றி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.

News December 7, 2025

CM செய்வது கண் துடைப்பு நாடகம்: நயினார்

image

ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக லேப்டாப்கள் வழங்குவது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது லேப்டாப் வழங்குவேன் என CM அறிவித்துள்ளது கண் துடைப்பு நாடகம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதை CM-ஆல் மறுக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!