News March 25, 2025
ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை: எம்.எல்.ஏ கோரிக்கை

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி உயரம் சிலை அமைக்க வேண்டும் என ஒரத்தநாடு எம்.எல்.ஏ ஆர்.வைத்திலிங்கம் இன்று (மார்ச்.25) தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பு இருந்தால் சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் என்றார் அவர். ஷேர் !
Similar News
News April 18, 2025
தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ( Retail Store Manager ) வேலைக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 18, 2025
ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04362-231336, 9445000286 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 18, 2025
தீப்பிடித்து எறிந்த குப்பைகள் – போராடி அணைக்கப்பட்டது

தஞ்சை, பாபநாசம் அரசலாறு பாலத்தின் கரையோரமாக அதிக அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தால் அவை காய்ந்து இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமைடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.