News January 2, 2025

ராஜகிரி: தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

image

பாபநாசம் தாலுகா, ராஜகிரி ஊராட்சி, மணல்மேடு கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவர் வீரையன் (67). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், நேற்று ராஜகிரியில் ஒருவரது வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத வகையில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 10, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

தஞ்சை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

தஞ்சை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

தஞ்சை: துணிக்கடையில் தீ விபத்து

image

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள துணிக்கடையில் எதிர்பாராத விதமாக இன்று (ஜன.10) காலை தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக கடையில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தஞ்சை மாநகர திமுக செயலாளர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடத்தில் கேட்டுக் கொண்டனர்.

error: Content is protected !!