News April 25, 2025
ராகு தோஷம் நீக்கும் நாகநாத சாமி கோயில்

திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலம் ராகு பகவானுக்குரிய தலமாகும். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் நாளை மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News September 18, 2025
புதுச்சேரி சட்டபேரவை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரியில் இன்று 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து கூட்டத்தை துவங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுச்சேரியில் தொழில் துவங்குவதை எளிமையாக்குவது குறித்த மசோதா மற்றும் காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளன.
News September 18, 2025
புதுச்சேரி நிவாரணப்பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மீன்வளம் & மீனவர் நலத்துறை மூலம் மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான தடைக்காலப நிவாரணம் பெறும் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த பயனாளிகளின் 2-ம் கட்ட உத்தேச பட்டியல் இணையதளத்தில் (fisheries.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் இன்று (செப்.18) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 18, 2025
புதுச்சேரி- மரப்பாலம் மின்பாதையில் மின்தடை அறிவிப்பு

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வில்லியனுார் – மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது