News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
Similar News
News November 2, 2025
மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 2, 2025
மயிலாடுதுறை: மூதாட்டியிடம் 13 சவரன் நகை பறிப்பு

மயிலாடுதுறை கூறைநாடு அழகப்ப செட்டி தெருவை சேர்ந்தவர் சுசீலா(75). இவர் தனது வீட்டில் அருகே உள்ள கோயிலுக்கு சென்று திரும்பும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரிடமிருந்து 13 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுக்குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலடுதுறை காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 2, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண்ணிற்கு பரிசு தொகை கிடைத்திருப்பதாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது பணம் அல்லது தனிப்பட்டதகவல்கள் திருடுபோக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர்குற்றங்கள் குறித்து 1930ல் புகார் தெரிவிக்கலாம்.


