News April 13, 2025
ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News November 2, 2025
மதுரை: பைக் வாங்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

மதுரை அருகே தேனூரை சேர்ந்தவர் வடிவேல் மகன் நிதிஷ்குமார்(23). இவர் விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். சொந்தமாக பைக் வாங்க ஆசைப்பட்டு முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் மனமுடைந்து இன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 1, 2025
மதுரை மாநகராட்சியில் புதிய மினி ரோபோட் தொடக்கம்

மதுரை மாநகராட்சிக்குள் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் புதிய மினி ரோபோட் வாகனம் இன்று (01.11.2025) தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா விஜயன், பயன்பாட்டுத் துறை உதவி பொறியாளர் அலிநீத் மற்றும் சாவனா ஸ்பேர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News November 1, 2025
மூத்த தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழுக்கும் தமிழ் துறைக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றிய வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் கீழ் ரூ.8000 உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. 2025-2026 ஆண்டிற்கான விண்ணப்பங்களை மதுரை ஆட்சியர் அலுவலக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.


