News August 18, 2024

ரவுடி சீசிங் ராஜா தப்பியோட்டம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியான சீசிங் ராஜா, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சீசிங் ராஜாவின் மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆந்திராவில் ஒரு முறை போலீஸ் வருவதற்கு முன் சீசிங் ராஜா தப்பி சென்ற நிலையில், இம்முறையும் தப்பியுள்ளார்.

Similar News

News November 21, 2025

சென்னை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

image

சென்னை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

சென்னை: பைக்கில் சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மவுலி (23) கார் ஓட்டுநர். நேற்று காலை, பைக்கில் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார்.3 பேர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். அபிராமபுரம் போலீசார், கார் ஓட்டுனர் மவுலியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

சென்னை: வீட்டின் அருகே குடியிருந்த காமுகன்

image

தேனாம்பேட்டை பகுதியில், வேலைக்கு சென்றிருந்த பெண்ணின் இரு மகள்கள் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், வீட்டுக்குள் சென்று சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த அவர்கள் தாய், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!