News November 24, 2024

ரவுடி கொலை – 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது

image

சென்னை எண்ணூரில் ரவுடி பாலா என்கிற யுவராஜ் கொலை செய்யப்பட்ட 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா (எ) யுவராஜ், நேற்று இரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்த பாலாவை நண்பர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து, கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 23, 2025

சென்னை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

image

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் (044-25241002 9445477825). ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

image

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

சென்னை: ரயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை

image

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து சென்னைக்கு இன்று(நவ.22) அதிகாலை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் குழந்தையை கண்டெடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!