News November 24, 2024
ரவுடி கொலை – 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது

சென்னை எண்ணூரில் ரவுடி பாலா என்கிற யுவராஜ் கொலை செய்யப்பட்ட 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா (எ) யுவராஜ், நேற்று இரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்த பாலாவை நண்பர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து, கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 27, 2025
சென்னைக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றார். மேலும் வரும் நவ.30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு வரும் நவ.29 அன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
சென்னையை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!

சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்தில் 2022ம் ஆண்டு, சதீஷ் என்பவர் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.
News November 27, 2025
சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துாரில் கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்தகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.


