News November 24, 2024
ரவுடி கொலை – 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது

சென்னை எண்ணூரில் ரவுடி பாலா என்கிற யுவராஜ் கொலை செய்யப்பட்ட 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா (எ) யுவராஜ், நேற்று இரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்த பாலாவை நண்பர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து, கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 2, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழுவில், காலியாக உள்ள உதவியாளர்களுடன் இணைந்த, கணினி இயக்குபவர் பணியிடம், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. +2 தேர்ச்சி. கணினி அறிவு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் IT
News November 2, 2025
புதிய சாதனை படைத்த ஓமந்தூரார் மருத்துவமனை!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரூ.500-ல், 2 நிமிடத்தில் இதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை மூலம், ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிந்து, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
News November 2, 2025
ஒமந்தூரார் மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் அறிமுகம்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.500-ல்,வெறும் 2 நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை மூலம் ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்


