News April 29, 2025
ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Similar News
News September 17, 2025
தொழிற்பயிற்சி நிலையங்கள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News September 17, 2025
திருவள்ளூர்: சாலைகளில் கொடி, பேனர்களுக்குத் தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் (Centre Median), தற்காலிகமாக எந்தவிதமான கொடிகளும் அமைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
News September 17, 2025
திருவள்ளூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திருவள்ளூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <