News April 29, 2025
ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Similar News
News December 9, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (8.12.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News December 9, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (8.12.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.


