News April 29, 2025

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

image

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Similar News

News December 23, 2025

திருவள்ளூர் மக்களே சொந்த வீடு கட்ட ஆசையா?

image

சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இந்த முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக விளங்குகின்றது. இங்கு வரும் பக்தர்கள் நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வணங்கி சென்றால் உடனே நிறைவேறிவிடும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (டிச.30) அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

News December 23, 2025

திருவள்ளூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!