News April 29, 2025

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

image

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Similar News

News January 6, 2026

JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

திருவள்ளூர்: குளத்தில் தத்தளித்து பலி!

image

பொன்னேரி: சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி(21). இவர் நேற்று(ஜன.5) மாலை தனது நண்பர்களுடன் தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு குளிக்கச் சென்றார். மது அருந்தி குளத்தில் இறங்கிய அவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார், அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

திருத்தணி கோயிலுக்கு செல்ல சூப்பர் இலவச வசதி

image

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து தேர்வீதிக்கு செல்வதற்கு வசதியாக கோயில் சார்பில், இலவச வேன் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்து செல்வதற்கு உபயதாரர் மூலம், ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்னி வேன் பெறப் பட்டது. இந்த வேனை நேற்று(ஜன.5) கோயில் இணை ஆணையர் ரமணி தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!