News April 29, 2025
ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Similar News
News December 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News December 3, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
BREAKING: திருவள்ளூருக்கு ஆரஞ்சு ALERT!

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மழையானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கூறியுள்ளனர்.


