News August 14, 2024

ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக கூடுதல் பேருந்துகள்

image

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 18-ம் தேதி வரை கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை 30 பேருந்துகளும், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து பிராட்வே மற்றும் தியாகராய நகர் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

நம்ம சென்னை தாங்க எல்லாத்துலையும் First!

image

1.சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
2.ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
3.ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
4.புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
5.மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
6.ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
7.சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம். ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

தோட்டா தரணிக்கு செவாலியே விருது

image

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நேற்று (நவ.13) ‘லா மேசான்’ என்ற கஃபே-நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ வழங்கப்பட்டது. கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!