News April 26, 2025
ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
Similar News
News November 12, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (12.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
மதுக்கரை அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வருண்(20). கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் படிக்கும் பிரகதீஸ்வரர் என்பவரை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு ஹாஸ்டல் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதியதில் பலியானார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
கோவை: கடன் தொல்லை தீர இங்க போங்க!

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


