News September 13, 2024

ரயில் சேவை ரத்து: காஞ்சிபுரம் சேவையில் மாற்றமில்லை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (செப். 15) ஞாயிற்றுக்கிழமை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 22, 2025

காஞ்சி: தொடரும் கஞ்சா அவலம்… அதிரடி காட்டிய போலீஸ்!

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் உப்புகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்த போலீசார், விஷ்வா, சூர்யா ஆகிய இருவரையும் நேற்று (நவ.22) விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 22, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்துபணி

image

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News November 21, 2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர் ஆய்வு கூட்டம்

image

இன்று (நவ.21) காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

error: Content is protected !!