News April 14, 2024

ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

image

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Similar News

News November 19, 2025

மதுரையில் உணவுத் திருவிழா; துணை முதல்வர் வருகை

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நவ.22 முதல் டிச.3 வரை சரஸ் மேளா எனும் கண்காட்சி நடக்க உள்ளது. உணவுத் திருவிழாவும் நடக்கிறது. இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். மதுரை, தஞ்சாவூர் பொம்மைகள், கடலோரப் பொருட்கள் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும். *ஷேர்

News November 19, 2025

மதுரை: நாய் குறுக்கிட்டு விபத்து; கணவன், மனைவி பலி

image

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த கணவன் மனைவி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். காமாட்சி அம்மன் நகர் அருகே சென்ற போது, குறுக்கே நாய் ஒன்று வர, அதன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டு இறந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 19, 2025

மதுரையில் மெட்ரோ திட்டம் நிறுத்தம் – மெட்ரோ விளக்கம்.!

image

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது, “மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை. திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!