News April 14, 2024

ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

image

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Similar News

News November 22, 2025

மதுரை: ஓட ஓட விரட்டி கொன்ற இருவர் கைது!

image

மதுரையில் முத்துமணி போஸ் என்பவர் பைக்கில் சென்றபோது, அவரை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டு <<18327802>>கொலை <<>>செய்ததாகக் கூறி, ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சரவணக்குமார்(19) மற்றும் கார்த்திகேயன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு பகுதியில் ஜூலை 11ம் தேதி சிவமணியை கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்டதால், பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News November 22, 2025

மதுரை: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

image

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மதுரை: பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.!

image

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பிரேம்குமார்(29). இவர் கல்யாணிபட்டி பாலத்தில் அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!