News April 14, 2024
ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்
Similar News
News October 19, 2025
மதுரை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கிவரும் நிலையில், அசைவ உணவு சமைப்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் மாலை முதலே குவிந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி வருகின்றனர்.
News October 19, 2025
மதுரையில் தீபாவளிக்கு கனமழை.!

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக மதுரையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
மதுரை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

மதுரையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.