News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
Similar News
News April 18, 2025
செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.
News April 18, 2025
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 044-27426020, 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்
News April 18, 2025
மாமல்லபுரத்தில் ஒருநாள் இலவச அனுமதி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்