News August 3, 2024

ரயில்வே மேம்பாலத்தில் எம்.பி. கோபிநாத் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதன் கட்டுமான பணிகளை கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர். அவர்களிடம் பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

Similar News

News October 21, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.21) 42.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், பர்கூரில் அதிகபட்சமாக 18மி.மீ மழையும், போச்சம்பள்ளி 7.4 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கே.ஆர்.பி அணை 7 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் இன்று பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாய் பெய்யும் என்று எதிரிபார்க்கப்டுகிறது.

News October 21, 2025

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

கிருஷ்ணகிரி: காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்

image

அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படும் காவலர்கள் வீர வணக்க தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் உயிரிழந்த 191 காவலர்களுக்கு அணிவகுப்பு&துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

error: Content is protected !!