News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 15, 2025
தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
பாஜக மாவட்ட தலைவர் கண்டனம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. இதன் பணிகள் 95% முடிவடைந்த நிலையில் தமிழக அரசு திடீரென்று இந்த மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியுள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு திமுக செய்துள்ள பெரும் துரோகம் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்
News December 14, 2025
தூத்துக்குடி: Certificate இல்லையா? – கவலை வேண்டாம்

தூத்துக்குடி மக்களே; உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


