News September 14, 2024
ரயில்கள் ரத்து: கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்க முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு ALERT!

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு, இன்று விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மழையானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கூறியுள்ளனர்.
News December 3, 2025
செங்கல்பட்டு: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
News December 3, 2025
செங்கல்பட்டு: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


