News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி 

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News December 6, 2025

இராணிப்பேட்டை: பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

இராணிப்பேட்டை: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

இராணிப்பேட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

image

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

error: Content is protected !!