News March 28, 2025
ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 7, 2026
பன்றி வெடியில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு

பெருவளையம் ஊராட்சி தச்சம்பட்டை சேர்ந்தவர் கண்ணுரெட்டி . இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது . இன்று ஜனவரி 6 ஆம் தேதி திடீரென வெடி சத்தம் கேட்டது. மாட்டின் உரிமையாளர் அங்கு ஓடி சென்று பார்த்ததில் மாட்டுக்கு தாடை கிழிந்து ரத்தம் ஒழுகியது . பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு சிக்கியது தெரிய வந்தது . விபத்தில் பசுமாடு உயிரிழந்தது காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்
News January 7, 2026
ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: சிக்கிய அலுவுலர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .
News January 7, 2026
ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: சிக்கிய அலுவுலர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .


