News April 10, 2025
ரயிலில் தலையை வைத்து இருவர் தற்கொலை

காட்பாடி – லத்தேரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், இன்று (ஏப்ரல் 10) அதிகாலை ஆண் – பெண் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த இருவர் மீதும், சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரயில் ஏறி இறங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார், உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
அரிஞ்சய சோழன் புதைக்கப்பட்ட கோயில்

இறந்த மன்னர்களை அடக்கம் செய்து அதன் மீது சிவாலயங்கள் எழுப்புவதை பள்ளிப்படை என்பார்கள். வேலூர் மேல்பாடியில் ராஜராஜ சோழனின் பாட்டன் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை உள்ளது. பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. வேலூர் மாவட்டத்திற்கு வரலாற்று பெருமை சேர்க்கும் பள்ளிப்படை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினீரிங் பிரிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. 30 வயதிற்குட்பட்ட டிப்ளமா எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் அல்லது பயோ மெடிக்கல் இஞ்சினீரிங் படித்த இளைஞர்கள் இந்த<
News April 19, 2025
வேலூரில் இன்ஜினியரிங் படித்தால் வேலை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – ADA), காலியாகவுள்ள பிராஜெக்ட் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப உள்ளது. 137 காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் டிகிரி, மாஸ்டர் டிகிரி, Ph.D படித்தால் போதும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90,789 முதல் ரூ.1,08,073 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <