News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News July 9, 2025

கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

image

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

News July 9, 2025

நாகை மாவட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவுகளில், தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசாணையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வரண் முறைப்படுத்த 2026 ஜூன் 30 ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

image

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <>ssc.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். <<17003633>>(பாகம்-2)<<>>

error: Content is protected !!