News June 2, 2024

ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவர் உயிரிழப்பு 

image

அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

Similar News

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 10 மணி – தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்றக்கோரி அதன் முன்பு தூத்துக்குடி புனித தோமையார் மறை வட்டாரம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணி – போளூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

கன்னியாகுமரி: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

image

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!