News March 24, 2025
ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி நம்பாதீங்க!

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரவியது. அதாவது, மாசிமக விழாவுக்கு கடந்த 12ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ஆம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி ரம்ஜான் கிடையாது 31ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் உரிய விளக்கம் அளித்தது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News December 2, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
தஞ்சை: இடிந்தது விழுந்த பள்ளியின் சுவர்!

தஞ்சையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடு கட்டிடம் உள்ளிட்டவை இடிபாடுகளில் சிக்கி உள்ளன. இந்நிலையில் நேற்று (டிச. 01) தஞ்சாவூர் பிளாக் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்களும், சாலையில் நடந்து செல்வோரும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதனை சரி செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.
News December 2, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நேற்று (டிச.01) குருங்குளம் மேற்கு ஊராட்சி அற்புதபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


