News March 24, 2025
ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி நம்பாதீங்க!

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரவியது. அதாவது, மாசிமக விழாவுக்கு கடந்த 12ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ஆம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி ரம்ஜான் கிடையாது 31ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் உரிய விளக்கம் அளித்தது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News September 19, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையளவு தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் 4 மிமீ, கும்பகோணம் 88 மிமீ, திருவிடைமருதூர் 78 மிமீ, திருவையாறு 11 மிமீ, அய்யம்பேட்டை 22 மிமீ, பாபநாசம் 25 மிமீ, பேராவூரணி 6.40, கீழணை 70 மிமீ, மஞ்சலாறு 60 மிமீ, பட்டுகோட்டை 2 மிமீ என தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 396 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
News September 19, 2025
தஞ்சாவூர் மக்களே தள்ளுபடி விலையில் விற்பனை?

சரஸ்வதி மஹால் நூலக வளர்ச்சிக்கு பங்காற்றிய மாமன்னா் இரண்டாம் சரபோஜியின் 248- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, ஆய்வாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செப் 24-ஆம் தேதி முதல் சரசுவதி மகால் நூலகம் பதிப்பித்து வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொ) பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தஞ்சாவூர்: சாலை விபத்தில் இளம்பெண் பலி

கும்பகோணம் அருகே மணப்படையூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சிவகாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜெயக்குமார், கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.