News December 6, 2024
ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: மாநாட்டில் தகவல்

இந்தியாவில் 6.40 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும், தாய்லாந்து 26 லட்சத்து 15 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், இந்தோனேசியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில் 85% ரப்பரும், தமிழ்நாட்டில் 4% ரப்பரும் உற்பத்தி செய்யப்படுவதாக குலசேகரத்தில் நேற்று(டிச.,6) நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 23, 2025
குமரி: காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 22, 2025
பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரி நீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 44 அடி நீர்மட்டம் உள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து இன்று (நவ.22) 500 கன அடி உபரி நீர் அவசரகால மதகுகள் மூலம் திறந்து விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
குமரி: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


