News March 23, 2024
ரத்த வெள்ளத்தில் பலியான நண்பர்கள்

மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் 19 , ஸ்ரீதர் 20 ஆகிய இரு நண்பர்கள் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செக்கானூரணி அருகே அழகுசிறையில் வைத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 15, 2025
மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல். 15) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
மதுரை அரசு அலுவர்களின் தொடர்பு எண்கள்

மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்
News April 15, 2025
சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு கட்டண அறிவிப்பு

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.