News March 28, 2024
ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.
Similar News
News December 18, 2025
தஞ்சை: 10th போதும் அரசு வேலை ரெடி!

தஞ்சை மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
News December 18, 2025
தஞ்சை: நாளை வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலானது நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
தஞ்சை: கொள்முதல் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தஞ்சை மண்டலத்தில் நடப்பு 2025-26 சம்பா பருவத்தில் உற்பத்தியாகும் நெல்லை கொள்முதல் செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் நிலையில் பணிபுரிய விருப்பமுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க


