News April 3, 2024

யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி

image

ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் UPI மூலமாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் ஏப்.1 முதல் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைய முன்பதிவில்லாத கவுன்டர்களில் டிக்கெட்டுக்கான பணத்தை UPI மூலம் செலுத்தலாம். மேலும் சென்னை கோட்டத்தில் சில ரயில் நிலையங்களி இந்த வசதி சோதனை அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

சென்னை: ஜமீன் குடும்பத்தாருக்கு அபராதம்

image

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 45 கிரவுண்ட் நிலத்தை தங்களுடைய குடும்ப சொத்து எனக்கூறி சிவகிரி ஜமீனின் வாரிதாரர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து வேறு ஒருவருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர். (ஏப்ரல்19) இவ்வழக்கு விசாரணையில் சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 19, 2025

சென்னை மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

தண்டையார்பேட்டை-044-25911727, திருவொற்றியூர்-25991997, புரசைவாக்கம்-25388978, பெரம்பூர்-25375131, மாதவரம்-26590193, அயனாவரம்-26431726, அமைந்தகரை-26201727, அம்பத்தூர்-26252785, எழும்பூர்-28361890, மதுரவாயல்-23861386, மாம்பலம்-24891464, மயிலாப்பூர்-24331292, வேளச்சேரி-22431737, கிண்டி-22351850, ஆலந்தூர்-22320580, சோழிங்கநல்லூர்-24501700. *முக்கியமான எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 19, 2025

கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி 

image

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!