News March 30, 2025
யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் இந்த புத்தாண்டு தினம். நமது பாரம்பரிய, பண்பாட்டு அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும், நிறைக்கட்டும். மேலும் புதுச்சேரியில் உள்ள தெலுங்கு மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
News April 10, 2025
துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

காரைக்காலில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49ஆவது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும் சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.
News April 10, 2025
புதுவை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றம்

புதுச்சேரியில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனை என். ஆர் . காங்கிரஸ்- பா. ஜ. க கூட்டணி ஆட்சியில் இரண்டு கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதனை 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.