News August 27, 2024
யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி

நாகையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. இன்றைய காலகட்டத்தில் ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே புதிய கட்சிகள் தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது எனத் தெரிவித்தார் அவர்.
Similar News
News December 4, 2025
நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
நாகை: CCTV பழுதுநீக்கும் பயிற்சி அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், வேதாரண்யத்தில் மத்திய அரசு மூலம் 13 நாட்கள் இலவச சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கும் பயிற்சி வருகிற 10ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 மற்றும் 9047710810 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


