News August 27, 2024

யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி

image

நாகையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. இன்றைய காலகட்டத்தில் ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே புதிய கட்சிகள் தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது எனத் தெரிவித்தார் அவர்.

Similar News

News December 6, 2025

நாகப்பட்டினம் துறைமுகத்தின் பெருமை!

image

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாக விளங்கி வருகிறது. குறிப்பாக நாகை மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இது இடைக்கால சோழர்கள், போர்ச்சுகீசியர்களின் முக்கிய துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 6, 2025

நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி

image

நாகை மாவட்டம் சின்னதும்பூர் ஊராட்சி அழகிரி தெருவை சேர்ந்த திருமாறன் கட்டிட பணியின் போது கீழே விழுந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த செய்தி அறிந்த, கீழையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நேரில் சென்று ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- நிதிஉதவி வழங்கினார்.

News December 6, 2025

நாகை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<> HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!