News September 27, 2024

யானை தந்தம் விற்க முயற்சி, 5 பேர் கைது

image

கோவை கவுண்டம்பாளையம் அருகில் உள்ள, தனியார் குடோனில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்க்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்த்து அங்கு சோதனை செய்ததில், சுமதி (55), ஆஸாத் அலி(45), நஞ்சப்பன் (47), சந்தோஷ் பாபு (42), 5.கோவிந்தராஜுலு(65) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 21, 2025

கோவையில் பட்டாசு வெடிப்பு – 36 பேர் மீது வழக்குப்பதிவு!

image

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடித்தாக கோவையில் 36 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

மேட்டுப்பாளையத்தில் ஆண் சடலம் மீட்பு!

image

மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்த முதியவர் மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி என்பதும், மயங்கி விழுந்து உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News October 21, 2025

வால்பாறையில் தொடரும் அவலம் கண்டுகொள்ளுமா அரசு?

image

கோவை வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டுகொள்ளுமா அரசு?

error: Content is protected !!