News August 18, 2024
யானை உயிரிழப்பில் தோட்ட காவலாளி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
விருதுநகர்: ரூ.86,955 ஊதியத்தில் வேலை

இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக மாதம் ரூ.86,955 வரை வழங்கப்படும் நிலையில் 18- 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை <


