News August 18, 2024

யானை உயிரிழப்பில் தோட்ட காவலாளி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 19, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.21 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

விருதுநகரை உலுக்கிய கொலையில் மேலும் ஒருவர் கைது

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஏற்கனவே ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்டு நிலையில் மற்றொரு குற்றவாளி முனியசாமியை போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!