News August 25, 2024
மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக நவ. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காணவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.
Similar News
News November 18, 2025
உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.
News November 18, 2025
உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.
News November 18, 2025
பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.


