News August 25, 2024
மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக நவ. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காணவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.
Similar News
News November 17, 2025
புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.
News November 17, 2025
2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 17, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.


