News May 22, 2024

மோசமான வானிலையால் மீண்டும் திரும்பிய விமானம்

image

சென்னையில் இருந்து அந்தமானுக்கு 142 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ஆகாசா ஏர் விமானம் மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிரங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அதனை தொடர்ந்து விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் நாளை‌ புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Similar News

News May 8, 2025

முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

image

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

News May 8, 2025

சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

image

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.

News May 7, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

error: Content is protected !!