News August 9, 2024
மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.
Similar News
News December 23, 2025
BREAKING: கோயம்புத்தூரில் 300 பேர் கைது

கோவை மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய சட்டங்கள் தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்றன என குற்றம் சாட்டிய அவர்கள் முழக்கமிட்டனர். பின் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News December 23, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். (SHARE பண்ணுங்க)
News December 23, 2025
கோவை: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!

கோவை இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான வீடு மதுக்கரையில் உள்ளது. இந்த வீட்டில் அவர், அவரது மகள், உறவினர் மகள் வசித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டரை வாகனத்தில் இறக்கிவிட வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணன், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.


