News August 9, 2024

மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

image

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.

Similar News

News January 3, 2026

மதுக்கரை பகுதியில் மர்ம விலங்கு? அதிர்ச்சி சம்பவம்

image

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை மற்றும் எட்டிமடை பகுதிகளில் நேற்று இரவு மர்ம விலங்கு மோதியதில், இப்பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலா வரும் விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதைக் கண்டறிய தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 3, 2026

கோவை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில் கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். <>voters.eci.gov.in <<>> இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!