News January 23, 2025
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்து, உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக ஜன.25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற உள்ளது.
Similar News
News December 5, 2025
ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 5, 2025
திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்த பயங்கர சம்பவம்!

திண்டுக்கல் இந்திரா நகர் மாரிமுத்து (50) நேற்று முன்தினம் வெளியில் சென்றபோது, மர்மநபர் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடினார். அதேநாள் சொப்பணதேவி வீட்டில் ரூ.1 லட்சமும் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி மூலம் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் சதீஷ்குமார் (24) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட நகை, பணமும் மீட்கப்பட்டன.
News December 5, 2025
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


