News January 2, 2025

‘மொந்தன்’ வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு – மனு

image

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான அம்மன்புரம் பகுதியில் ‘மொந்தன்’ என அழைக்கப்படும் வாழைப்பழம் மிகவும் பிரசித்தி பெற்று, அப்பகுதியில் மட்டும் வளரக்கூடிய ஒரு வாழை இனமாக உள்ளது. இந்த நிலையில் இந்த பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மன்புரம் “மொந்தன் வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புவிசார் குறியீடு வழங்க வேண்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

image

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்குமார் (27). இவருக்கும் புனிதராஜிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திசையன்விளை ரோடு பகுதியில் புனித ராஜ் அவரது அண்ணன் நாகராஜ் (28) இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வேல்குமாரை உயிரிழந்தார். இதுகுறித்து குலசை போலீசார் வழக்குபதிவு செய்து புனிதராஜ், நாகராஜை தேடி வருகின்றனர்.

News December 10, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் மனு கூட்டம் இன்று (டிச.10) மாவட்ட காவல்அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், காவல் நிலையத்தில் தங்கள் கொடுத்த புகார் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த குறைதீர் கூட்டமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும்.

News December 10, 2025

தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!